தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மனைவி பிரிந்து சென்றதால், மனம் விரக்தியடைந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.கலையரசன்(27). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிராமி. தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளது.
இந்நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் அபிராமி கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த கலையரசன் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.