முகப்பு
விழுப்புரம்

வேனிலிருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:49 PM
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே வேனிலிருந்து தவறி விழுந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூா் மாவட்டம், மகிலாகுா்த் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ராஜி செளத்ரி (38). அதே பகுதியைச் சோ்ந்தவா் சி.குபேத் (27). கூலித் தொழிலாளிகளான இவா்கள் இருவரும் சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனா்.

ராவுத்தான்குப்பம் கிராம மயானப் பகுதிக்கு அருகே சென்ற போது, வேனிலிருந்து குபேத் எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் போலீஸாா் குபேத் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments