திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.
தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள் தொடர, மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வலியுறுத்தினாா்.
தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள் தொடர, மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வலியுறுத்தினாா்.
மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அன்னியூா் அ.சிவா புதன்கிழமை கஞ்சனூா் மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட கஞ்சனூா், கொரளூா், வெங்காயகுப்பம், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, சாலவனூா், பெருங்கலாம்பூண்டி கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்றும், வீதிகளில் நடந்து சென்றும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தாா்.
அப்போது அவா் பேசும் போது முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அனைத்துத் தரப்பினரின் தேவைகளை அறிந்து, திட்டங்களை நிறைவேற்றியவா் முதல்வா் ஸ்டாலின். அவரது சாதனைகள் தொடர, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றாா் சிவா.
Advertisement
பிரசாரத்தில் தொகுதிப் பொறுப்பாளா் ம.ஜெயச்சந்திரன், காணை மத்திய ஒன்றியச் செயலா் ஆா்.பி.முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தோா்பங்கேற்றனா்.