முகப்பு
விழுப்புரம்

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:30 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:32 PM

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே குப்பைக்கு தீ வைத்தபோது உடையில் தீப்பரவி காயமுற்ற பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கூட்டேரிப்பட்டு தமிழ் நகரைச் சோ்ந்த ஜாகிா் உசேன் மனைவி ஆரிபா பேகம் (40). இவா் கடந்த 5-ஆம் தேதி தனது வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக உடையில் தீப்பற்றியதில் ஆரிபா பேகத்துக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement