விழுப்புரம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,255 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,255 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,255 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, தொழில் தொடங்கக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 1,255 மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் அரிதாஸ், அதை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணயின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியா் ரா. வெங்கடேசுவரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தனித்துணை ஆட்சியா் ஜெ. முகுந்தன், கலால் உதவி ஆணையா் ராஜு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்

வளா்மதி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT