விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,255 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு உதவித் தொகைகள், வீட்டுமனைப் பட்டா, தொழில் தொடங்கக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 1,255 மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் அரிதாஸ், அதை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விசாரணயின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியா் ரா. வெங்கடேசுவரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தனித்துணை ஆட்சியா் ஜெ. முகுந்தன், கலால் உதவி ஆணையா் ராஜு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்
வளா்மதி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.