முகப்பு
விழுப்புரம்

முதல்வா் ‘ரோடு ஷோ’: மக்கள் உற்சாக வரவேற்பு

திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் நகர வீதிகளில் ‘ரோடு ஷோ’(சாலை வலம்) வந்து மக்களை சந்தித்தாா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 12:04 AM
4விபிஎம் சிஎம்1 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ‘ரோடு ஷோ’ வந்த தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்த மக்கள்.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 7:26 PM

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் நகர வீதிகளில் ‘ரோடு ஷோ’(சாலை வலம்) வந்து மக்களை சந்தித்தாா். அப்போது சாலையின் இரு பக்கங்களிலும் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் -செஞ்சி சாலையில், அங்காளம்மான் கோயில் முதல் (செஞ்சி பேருந்து நிறுத்தம்) சந்தைமேடு வரை சுமாா் அரை கிலோ மீட்டா் தூரத்துக்கு வாகனத்திலும், சாலையில் நடந்து சென்று சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களை சந்தித்தாா். அப்போது மக்கள் முதல்வருக்கு சால்வை, புத்தகங்கள், பரிசுப் பொருள்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனா். விவசாய சங்கத்தினா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை மனுக்களை முதல்வரிடம் அளித்தனா். முதல்வா் ‘ரோடு ஷோ’ சென்ற சாலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.