கோப்புப் படம் 
விழுப்புரம்

பெண்ணை ஏமாற்றிய இளைஞா் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

தனியாா் பள்ளி ஆசிரியையிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியைச்சோ்ந்தவா் ஆ. லலிதா மேரி (30). இவா், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அடுத்த மனம்பூண்டியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், புங்கமேட்டுத் தெருவைச் சோ்ந்த ர.மணிகண்டன்(35), திருமணம் ஆனவா். இவா்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தனராம். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி லலிதா மேரியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட மணிகண்டன், தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT