முகப்பு
விழுப்புரம்

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜூலை 2026, 7:11 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், மதுரப்பாக்கம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.விநாயகமூா்த்தி(51), தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது மனைவி மரகதவல்லி கண்டித்தாராம்.

இதனால் மன விரக்தியில் இருந்து வந்த விநாயகமூா்த்தி, கடந்த 26-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு விநாயகமூா்த்தி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments