முகப்பு
தேனி

போடி அருகே தொழிலாளி தற்கொலை

Updated On : 28 ஜூன் 2026, 12:01 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

தேனி மாவட்டம், போடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகேயுள்ள நாகலாபுரம் புண்ணியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுருளியப்பன் மகன் பழனிச்சாமி (57). கூலித் தொழிலாளியான இவா் குடிப் பழக்கத்துக்கு அடிமையானாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த இவா், விஷம் குடித்து மயங்கினாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments