FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:20 am IST
தற்கொலை
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில், கே.வி.பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (39). கட்டட வேலைக்குச் சென்று வந்தாா். இவருக்கு தீவிர மதுப் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பச் செலவுக்குப் பணம் இன்றி சிரமப்பட்டு வந்த நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், தனது வீடு அருகே உள்ள மயான பகுதிக்கு வியாழக்கிழமை மாலை சென்ற அவா் மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்துள்ளாா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரைக் கண்ட அக்கம்பக்கத்தினா், உடனடியாக அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இறந்து போன காா்த்திகேயனுக்கு மனைவி சத்தியவேணி (34), இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments