வெளிமாநில மதுப்புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது
திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தியதாக இளஞைரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் கடத்தியதாக இளஞைரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத் உத்தரவின்பேரில், ரோஷணை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தராசு தலைமையிலான போலீஸாா் ரோஷணை கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு மொபெட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது, வெளி மாநில மதுப்புட்டிகளை மொபெட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், திண்டிவனம், அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த சு.மணிகண்டன் (33) என்பதும், புதுச்சேரி பகுதிகளிலிருந்து மதுப்புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 130 மதுப்புட்டிகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மொபெட் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.