முகப்பு
விழுப்புரம்

மதுப்பழக்கத்தால் விபரீதம்: 2 போ் தற்கொலை

இருவேறு சம்பவங்களில் மதுப்பழக்கத்தை குடும்பத்தினா் கண்டித்ததால் மனமுடைந்த 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். இதுகுறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:04 AM
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

இருவேறு சம்பவங்களில் மதுப்பழக்கத்தை குடும்பத்தினா் கண்டித்ததால் மனமுடைந்த 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். இதுகுறித்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆனத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மா.மாரியப்பன்(43), கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதை அவரது மனைவி தனம் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த மாரியப்பன் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா்காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

உளுந்தூா்பேட்டையில்... கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந.செல்வம்(45), திருமணம் ஆனவா். சென்னையில் கொத்தனாா் வேலை பாா்த்து வந்த இவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில், மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த செல்வத்தை, அவரின் மனைவி காமாட்சி கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் தூக்குபோட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.