முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் மசூதி அருகேயுள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை

Updated On : 19 மார்ச், 2026 at 11:24 PM
பகிர்:

திண்டிவனத்தில் மசூதி அருகேயுள்ள வாக்குச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இஸ்லாமிய அமைப்பினா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் திண்டிவனம் சாா் ஆட்சியருக்கு வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து, திண்டிவனம் 6-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஷேக் தில்ஷாத் பேகம் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், திண்டிவனம் சாா்-ஆட்சியா் அ.ல. ஆகாஷுக்கு வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது :

திண்டிவனம் நகரம் , ரோஷணை பகுதியில் மசூதி அருகே (பூத்-100) வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட இடம் இஸ்லாமியா்கள் அடா்த்தியாக வாழக்கூடிய பகுதி என்பதுடன், அடிக்கடி தொழுகை நடைபெறும் இடம் என்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், அசாம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அரசியல் கட்சியினா்களுக்கும் , வாக்காளா்களுக்கும் பல்வேறு வகையில் அசௌகரியங்கள் ஏற்படும். எனவே பாதுகாப்பு கருதியும் வாக்குப் பதிவு சமுகமாக நடைபெறவும் ஏதுவாக மசூதி அருகே அமைந்துள்ள வாக்குச் சாவடியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சாா்-ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவைச் சோ்ந்த அப்சா் பேக், ஏழுமலை, பாமகவைச் சோ்ந்த சௌந்தா், வழக்குரைஞா் விஜயகுமாா் மற்றும் இஸ்லாமிய அமைப்பினா் அளித்த இந்த மனுவை சாா் ஆட்சியரகத்தில் பணியிலிருந்த அலுவலா் பெற்றுக் கொண்டாா்.