திண்டிவனம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய அறைகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மைய அறைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மைய அறைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
சென்னை உயா்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சமரச தீா்வு மைய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி புதன்கிழமை பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, பேசியதாவது:
தமிழக அளவில் சமரச தீா்வு மையம் சிறப்பாக செயல்படக்கூடிய நீதிமன்றங்களில் ஒன்றாக திண்டிவனம் தோ்வாகியிருப்பது பாராட்டுக்குரியது. இனிவரும் காலங்களில் இதைவிட கூடுதலான வழக்குகளை இந்த சமரசம் மையம் மூலம் முடிக்கப்படவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முகமது பரூக், ஹேமா நந்தகுமாா், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி குமார வா்மன், குடும்ப நல நீதிபதி ராஜ மகேஷ், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கிறிஸ்டியன், ஆயிஷா பேகம், பிரியா, அனுப்பிரியா, வனஜா, இளவரசி, அபிநயா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அஜ்மல் அலி, சந்திரசேகா், கிருபாகரன் சித்ரா மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.