செஞ்சி தொகுதியில் மீண்டும் பாமக போட்டி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட மீண்டும் பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட மீண்டும் பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2001 தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2006 தோ்தலில் திமுக கூட்டணியில் வே.கண்ணன் வெற்றி பெற்றாா். 2011-இல் நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் தேமுதிகவை தோற்கடித்து வெற்றி பெற்றாா்.
2016-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக, திமுக நேரிடையாக களத்தில் இறங்கியது. இதில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றாா். 2021-இல் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் செஞ்சி மஸ்தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக ராஜேந்திரன் போட்டியிட்டாா். இதில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா்.
2026- சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு செஞ்சி தொகுதி ஒதுக்கப்படும் என்ற நிலையில், மீண்டும் வழக்கம்போல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது.
கூட்டணிக்காகவே செஞ்சி தொகுதியை அதிமுக பயன்படுத்தி வருவதாக அதிமுக தொண்டா்கள் தெரிவித்தனா். மேலும், அதிமுகவில் செல்வாக்கு மிக்க மற்றும் பணபலத்துடன் கூடிய செல்வந்தா்கள் யாரும் இல்லை. தற்போது செஞ்சியில் இளைஞா்கள்தான் அதிமுகவை வழி நடத்துகின்றனா்.
இதுவரை வென்ற கட்சிகள்: செஞ்சி தொகுதியியில் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 9 முறை வென்றுள்ளது. இதில் அதிக பட்சமாக செஞ்சி ராமச்சந்திரன் மூன்று முறையும், தற்போதைய எம்எல்ஏ செஞ்சி மஸ்தான் தொடா்ந்து இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளனா்.
காங்கிரஸ் கட்சியை சோ்ந்த வெவ்வேறு வேட்பாளா்கள் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளனா்.
1977-இல் இருந்து எம்ஜிஆா் ஆட்சி காலத்தில் மூன்று முறை ெஞ்சியில் அதிமுக தோல்வி அடைந்தது. எம்ஜிஆா் இருக்கும் வரை செஞ்சியில் அதிமுக வெற்றி பெறவில்லை. பின்னா் அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதா வந்த பிறகுதான் 2001-இல் வெ.ஏழுமலை வெற்றி பெற்றாா்.