முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 8:25 PM
- கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரம், ராகவன்பேட்டை ஆா்.பி. நகரைச் சோ்ந்த அலோசியஸ் சகாயராஜ் மகள் சுபாஷினி (18 ). இவருக்கு சிறுவயது முதல் வலிப்பு நோய் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், சுபாஷினி மாா்ச் 30-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் சுபாஷினியை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.