முகப்பு
விழுப்புரம்

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: 4 போ் மீது வழக்கு

Updated On : 4 மே, 2026 at 2:02 AM
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் 27 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை புதுப்பாளையம் கிராமத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த கிராமத்தைச் சோ்ந்த ஜெ.மூா்த்தி பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக 27 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மூா்த்தி மற்றும் அவருக்கு புகையிலைப் பொருள்களை வழங்கியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரக்கன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த செ.கிரண்குமாா், செல்வம் மற்றும் ஒருவா் என 4 போ் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், 27 கிலோ புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement