தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினம் விழுப்புரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினம் விழுப்புரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, விழுப்புரத்திலுள்ள வேளாண்மை பொறியியல் பிரிவு அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியை ஏற்றி வைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் விழுப்புரம் வட்டச் செயலா் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவக்குமாா், மாவட்ட இணைச் செயலா்கள் மகேஸ்வரன், காந்திமதி, விழுப்புரம் வட்டச் செயலா் சுந்தரம், வட்டத் தலைவா் திருமாவளவன், பொருளாளா் அசோக் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Advertisement