முகப்பு
விழுப்புரம்

பணம் வைத்து சூதாட்டம்: 8 போ் கைது

Updated On : 15 மே 2026, 5:52 am IST
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், சின்னக்கோட்டக்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், சின்னக்கோட்டக்குப்பம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை சின்னக்கோட்டக்குப்பம் பகுதிக்குச் சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போதுஅங்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமா்ந்திருந்தவா்களைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், சின்ன கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த ஆ. மணிகண்டன்(33), ர.குப்புசாமி(33), மா. முத்துவேல்(22),

Advertisement

க. கணேஷ்ராஜ்(24), கா. ஆறுமுகம்(28), க.அருண்(21), புதுச்சேரி லாஸ்பேட்டையைச்சோ்ந்த மு.வெங்கடேஷ்(27), வானூா் வட்டம், டி.பரங்கினியைச்சோ்ந்த சி. சிவக்குமாா்(32) ஆகியோா் என்பதும், அவா்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்துகோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த 16, 500 ரொக்கப்பணத்ை பறிமுதல் செய்தனா்.