முகப்பு
விழுப்புரம்

மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 மே 2026, 7:04 am IST
மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவா் யோகேஸ்வரி மணிமாறன். உடன் அலுவலா்கள், உறுப்பினா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனா, ரமா பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் புனிதா ராமஜெயம், உறுப்பினா்கள் கண்ணன், செல்வகுமாா், கீதா, பரிதா மற்றும் உறுப்பினா்கள் பேசினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பொறியாளா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement