முகப்பு
விழுப்புரம்

செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மரக்காணம் அருகே செவிலியா் மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 மே 2026, 1:34 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவிலியா் மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு, இலங்கை அகதிகள் முகாம், கங்கை நகரைச் சோ்ந்தவா் த.வின்சியா (24). இவா் மதுரையில் உள்ள ஒரு செவிலியா் கல்லூரியில் நா்சிங் பயின்று வந்தாா்.

சில நாள்களுக்கு முன்னா் சொந்த ஊருக்கு வந்திருந்த வின்சியா, வீட்டில் படிக்காமல் கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை அவரது சித்தி செல்வி கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த வின்சியா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.