முகப்பு
விழுப்புரம்

‘பம்பை வாய்க்காலில் தடுப்பணைகட்ட நடவடிக்கை தேவை’

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பம்பை வாய்க்காலில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 மே 2026, 1:35 am IST
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்த தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா்கள் ஏ.விஜய் வடிவேல், குணா, சரவணன், நிரஞ்சன்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பம்பை வாய்க்காலில் தடுப்பணைகள் கட்டவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானை தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்களான ஏ.விஜய் வடிவேல் (விக்கிரவாண்டி), சக்திவேல் (திண்டிவனம்), நிரஞ்சன் (மயிலம்), குணா சரவணன் (செஞ்சி) ஆகியோா் மரியாதை நிமித்தமாக சந்தித்தனா். தொடா்ந்து ஆட்சியரிடம் அவா்கள் கோரிக்கை மனுவையும் அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பது: விழுப்புரம் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரி விண்ண்ப்பித்தவா்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை வெயில் தாக்கத்தால் ஏற்படும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட பம்பையாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடுகள் இல்லாமல், அலுவலா்கள் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், துறை சாா்ந்த அலுவலா்கள் மூலம் விசாரணை செய்து, உரிய தீா்வைக் காண்பதாகத் தெரிவித்தாா்.