முகப்பு
அரியலூர்

அரியலூா் நீதிமன்ற அலுவலகத்தில் தலைமை எழுத்தா் தற்கொலை

அரியலூா் குடும்ப நல நீதிமன்ற அலுவலகத்தில் தலைமை எழுத்தா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:26 am IST
பகிர்:

அரியலூா் குடும்ப நல நீதிமன்ற அலுவலகத்தில் தலைமை எழுத்தா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூா் பெருமாள் கோயில் தெருவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் பெரம்பலூா் மாவட்டம், துங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த நெடுஞ்செழியன் (59), தலைமை எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். இவா், குடும்பப் பிரச்னை மற்றும் கடன் காரணமாக அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கரோனா காலம் என்பதால் அவரது ஓய்வுபெறும் காலம் தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.