ஜோதிட கேள்வி பதில்கள்

அரசுத்துறையில் பணிபுரியும் எனக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. அதன்பின்னர் என் மனைவிக்கு இரண்டு முறை கருத்தரித்து கலைந்துவிட்டது. என்னுடைய ஜாதகத்தில் கடுமையான புத்திர தோஷம் இருப்பதாக ஜோதிடர் கூறுகிறார். ஆண் குழந்தை பிறந்தால் பிரச்னையா? - வாசகர், ஈரோடு

DIN

உங்களுக்கு புத்திர தோஷம் இல்லை. புத்திர ஸ்தானாதிபதி லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். பாக்கியாதிபதி பித்ரு ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்வது சிறப்பு. ஆண் கிரகங்கள் வலுவாக உள்ளதால் ஆண் வாரிசு உண்டு. நல்ல முறையில் வளர்ச்சி அடைவார். சனிபகவான் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மட்டுமே ஆண் வாரிசு பாதிப்படையும் என்று கூறக்கூடாது. உங்கள் மனைவிக்கு புத்திர ஸ்தானாதிபதியும் புத்திரகாரகரும் வலுப்பெற்றிருக்கிறார்கள். அதோடு தற்சமயம் குருபகவானின் தசை நடக்கிறது. உங்கள் மகளுக்கு சகோதர காரகன் தொழில் ஸ்தானத்தில் வலுப்பெற்று அமர்ந்திருக்கிறார். சகோதர ஸ்தானத்தை ஆண் கிரகம் பார்வை செய்கிறார். இதனால் உங்களுக்கு நல்லபடியாக ஆண் வாரிசு அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT