ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்பொழுது நிரந்தர வேலை, திருமணம் இரண்டும் கைகூடும்?

தினமணி

சிவபெருமானை வழிபடவும்


உங்கள் மகனுக்கு  சிம்ம லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதியான சூரியபகவான் லக்னத்திலேயே ஆட்சிப் பெற்று குருபகவானுடன் (சிவராஜ யோகம் )

இணைந்திருக்கிறார். சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ருணம் ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு, சுக்கிர பகவான்களைப் பார்வை செய்கிறார். அயன ஸ்தானாதிபதியான சந்திர பகவான் தொழில் ஸ்தானத்தில் சுய சாரத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் அவருக்கு நல்ல வருமானம் தரும் நிரந்தர வேலையும் அமைந்து விடும். தொடர்வதும் குருபகவானின் தசையாக இருப்பதால் இன்னும் இரண்டரை ஆண்டுக்குள் படித்தப் பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும் . பிரதி ஞாயிற்றுக்கிழமை சிவபெருமானை வழிபட்டு வரவும்.


- வாசகர், அருப்புக்கோட்டை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT