ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு 76 வயது முடிந்துள்ளது. வாழ்க்கையில் நான் சுகப்பட்ட காலம் மிகவும் சொற்பம். மிகக்குறைந்த வருமானத்தில் வாழ்க்கை. கஷ்ட ஜீவனம். 17 வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க ஆரம்பித்தேன். குழந்தைகளை மிகவும் சிரமத்துடன் படிக்க வைத்தோம். மகள் நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார். மகன் விருப்பத் திருமணம் செய்து 32 வயதில் மனைவியை இழந்து விட்டார். எனது மகனின் வாழ்க்கை எப்போது சீரடையும்? மறுமணம் நடைபெறுமா? எனக்கு நிம்மதி எப்போது கிடைக்கும்?  - வாசகர், மேற்கு மாம்பலம்

DIN

 உங்களுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். லக்னாதிபதியும் தர்மகர்மாதிபதியும் லக்னத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. தன, பூர்வ புண்ணியாதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் உச்சம் பெற்ற சுகாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து இருக்கிறார். இதனால் புதஆதித்ய யோகம் உண்டாகிறது.புத்திரகாரகரான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஒன்பதாம் பார்வையாக கர்ம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்து இருக்கும் திக்பலம் பெற்றுள்ள செவ்வாய்பகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. இதனால் உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் மறுமணம் கைகூடும். உங்கள் குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT