ஐராவதம் மகாதேவன் 
புத்தக வெளி

50% தள்ளுபடியில் ஐராவதம் மகாதவேனின் கல்வெட்டியல் நூல்

தமிழ் பிராமி கல்வெட்டியல் குறித்து தினமணி முன்னாள் ஆசியரும், கல்வெட்டியல் அறிஞருமான மறைந்த ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆவணப் படைப்பு நூல் புத்தகக் காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

DIN

தமிழ் பிராமி கல்வெட்டியல் குறித்து தினமணி முன்னாள் ஆசியரும், கல்வெட்டியல் அறிஞருமான மறைந்த ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆவணப் படைப்பு நூல் புத்தகக் காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள ஆங்கில நூல் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரையிலான அசோகா் கால கல்வெட்டு எழுத்துகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் ஆராய்ச்சியின் வடிவமாக அந்த நூல் கருதப்படுகிறது.

கல்வெட்டியல் துறை ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆவணக் கருவூலமாகப் போற்றப்படும் நூல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் கடந்த 2014-இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு மூன்றாம் பதிப்பு கடந்த ஆண்டு வெளிக் கொணரப்பட்டது.

பழங்கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் குறித்த அரிய புகைப்படங்களுடன் விரிவான படைப்பாக வந்துள்ள அந்நூலின் விலை ரூ.4 ஆயிரமாகும். அதனை 50 சதவீதத் தள்ளுபடி விலையில் புத்தகக் காட்சியில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

SCROLL FOR NEXT