ஆழ்மனதின் அற்புத சக்திகள்
புத்தகம்: ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்
ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்
"ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்" , நூலாசிரியர் - ஜோசப் மர்ஃபி. நம் தமிழில் "நாகலட்சுமி சண்முகம்". இப்புத்தகம் முழுமையும் ஆழ்மனதை பற்றியும், அதன் செயல்பாட்டு முறையை பற்றியும், நம் எண்ணம் அதனால் வரும் விளைவு, மனதை எவ்வாறு சிறப்பாக சீர் அமைப்பது, அதன் மூலம் இந்த உலகின் நாம் விரும்பும் எதை வேண்டுமானாலும் எப்படி அடைவது, துன்பத்திற்கான காரணம், துன்பத்தை இன்பமாக மாற்றும் சக்தி, நாம் ஆழ்மனதை பயன்படுத்தி எப்படி செல்வம், நிம்மதி, அமைதி, முழுமை, அழகு, ஆரோக்கியம் ஆகிய அனைத்தையும் அடைவதற்கான வழி போன்ற பல்வேறு பகுதிகளை ஆராய்ந்து நமக்கு வழிமுறைகளையும் தீர்வையும் விவரிக்கின்றது.
அனைவரும் மிகக் கட்டாயம் படிக்க வேண்டிய அற்புதமான நூல். புத்தகம் படித்து முடிக்கும் போது நீங்கள் பார்க்கும் உலகம், நீங்கள் அதை அணுகும் விதம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அதற்கு நான் சவால் விடுகிறேன்.
- அன்பரசன்