சென்னை: சென்னை புத்தகக் காட்சி 2020 -ஐ முன்னிட்டு பொன்னுலகம் பதிப்பகத்தின் புத்தம் புது நூல்கள் குறித்து அதன் உரிமையாளர் திருப்பூர் குணா கூறியதாவது:
எங்களது பதிப்பகத்தின் சார்பில் இம்முறை 18 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் அரங்கில் அறிவியல் சார்ந்த நாவல்கள் அதிகளவில் விற்பனையாகின்றது.
ஈழப் போராட்டத்தின் போது மருத்துவராக பணி புரிந்த மிதயா கானவியின் நூலான கருணை நதி, துர்கா மாதா, ஈஸ்வரன்கள், எழுத்தாளர் ஜீவாவின் ஸ்டாலின் பற்றிய குரூஸோவின் பொய்கள் ஆகிய நூல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.