சென்னை: தமிழகத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில்,
வரும் நிதியாண்டில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
அதன்படி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,099.77 கோடி ஒதுக்கப்படும்.
முதல்வரின் பசுமை வீடு திட்டத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.