தமிழக பட்ஜெட்

பட்ஜெட்: மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்

DIN


சென்னை: சென்னையின் இருவேறு திசைகளை இணைக்கும் வகையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு வழித்தடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் புதிதாக சென்னையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52.1 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேலூர் , ஓசூர், ஈரோடு ஆகியவை மாதிரி நகரங்களாக உருவாக்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT