ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சென்னை போரூரில் புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனர் இராஜரத்தினம் கூறியதாவது:
நகைக் கடையுடன் கூடிய ஜவுளி விற்பனையகத்தை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் போரூரில் திறந்துள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரண்மனை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம் 10 தளங்களைக் கொண்டது. திறப்பு விழா சலுகையாக, டிச.7 முதல் 11-ஆம் தேதி வரை தங்க ஆபரணங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சவரனுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார் அவர்.