வர்த்தகம்

பார்தி டெலிகாம் நிறுவனத்தில் சிங்டெல் ரூ.2,649 கோடி முதலீடு

DIN

பார்தி டெலிகாம் நிறுவனத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்டெல் நிறுவனம் ரூ.2,649 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.2,649 கோடியை சிங்டெல் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இதற்காக, அந்த நிறுவனத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கி தரப்படவுள்ளன. பார்தி டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திரட்டிக் கொள்ளப்படும் இந்த தொகை நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.
பார்தி டெலிகாம் நிறுவனத்தில், சிங்டெல் நிறுவனம் தற்போது 47.17 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. அதேசமயம், பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மூலதனம் 50 சதவீதமாக உள்ளது.
சிங்டெல் நிறுவனத்தின் இந்த புதிய முதலீட்டையடுத்து, பார்தி டெலிகாம் நிறுவனத்தில் அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் 48.90 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது. 
கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பார்தி டெலிகாம் நிறுவனம் மேற்கொண்ட ரூ.2,500 கோடிக்கான உரிமை பங்கு வெளியீட்டில் சிங்டெல் நிறுவனம் பங்கேற்றது. இந்த நிலையில், 23 மாதங்களுக்குள் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்டெல் மீண்டும் முதலீடு மேற்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தாழ கண்ணால குத்தாத...!

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

SCROLL FOR NEXT