வர்த்தகம்

கிராண்ட் ஐ10 விலையை உயர்த்துகிறது ஹுண்டாய்

DIN

ஹுண்டாய் மோட்டார் இந்தியா, கிராண்ட் ஐ10 விலையை 3 சதவீதம் வரை உயர்த்தவுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மூலப் பொருள்களின் விலை உயர்வு காரணமாக கிராண்ட் ஐ10 விலை 3 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய விலை உயர்வானது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். அதேசமயம், இதர மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 
தற்போது கிராண்ட் ஐ10 காரின் விலை ரூ.4.74 லட்சம் முதல் ரூ.7.51 லட்சம் வரையில் உள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி புதிய வகை காரை ஹுண்டாய் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், கிராண்ட் ஐ10-இன் விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹுண்டாய் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய மாடல் மீண்டும் சான்ட்ரோ பிராண்டாக இருக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT