ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.293 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் ஐசிஐசிஐ லொம்பார்டின் மொத்த நேரடி பிரீமியம் வருவாய் ரூ.3,173 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,530 கோடியை எட்டியுள்ளது. இது, 11.3 சதவீத வளர்ச்சியாகும்.
நிகர லாபம் ரூ.204 கோடியிலிருந்து 43.6 சதவீதம் உயர்ந்து ரூ.293 கோடியாகி உள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.50 இடைக்கால ஈவுத் தொகை வழங்க முடிவெடுத்துள்ளது என ஐசிஐசிஐ லொம்பார்டு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.