வர்த்தகம்

மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய விற்பனை பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமனம்

DIN


மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக சந்தோஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மெர்ஸிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்டின் ஸ்வெங்க் கூறியுள்ளதாவது:
உலக அளவில் ஆடம்பர சொகுசு கார் பிரிவில் மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவம் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் விதத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை துணைத் தலைவராக இருக்கும் சந்தோஷ் ஐயரை, மெர்ஸிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய நியமனம் வரும் ஜூலை-1 முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே இப்பொறுப்புகளை வகித்து வரும் மைக்கேல் ஜாப், மலேசியாவில் மெர்ஸிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார் என்றார் மார்டின் ஸ்வெங்க்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT