வர்த்தகம்

பஜாஜ் ஆட்டோ லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு

DIN


புது தில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் மார்ச் காலாண்டில் 19.82 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கி ஒட்டுமொத்தமாக ரூ.7,395.19 கோடி வருவாய் ஈட்டியது. 

இது, 2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.6,788.43 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். நிகர லாபம் ரூ.1,175.47 கோடியிலிருந்து 19.82 சதவீதம் அதிகரித்து ரூ.1,408.49 கோடியாக இருந்தது.  

மதிப்பீட்டு காலாண்டில் வாகன விற்பனை 10,45,378 என்ற எண்ணிக்கையிலிருந்து 14 சதவீதம் வளர்ச்சி கண்டு  11,93,590-ஆனது.

2018-19 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.25,617.27 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.30,249.96 கோடியாகவும், நிகர லாபம் ரூ.4,218.95 கோடியிலிருந்து 16.79 சதவீதம் அதிகரித்து ரூ.4,927.61 கோடியாகவும் இருந்தது.

நிறுவனத்தின் இயக்குநர் குழு பங்கு ஒன்றுக்கு ரூ.60 (600%) ஈவுத்தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளதாக செபியிடம் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT