வர்த்தகம்

செப்.23-இல் ஆன்லைன் அங்காடிகள் அறிமுகம்: ஆப்பிள் நிறுவனம்

DIN

இந்தியாவில் ஆன்லைன் அங்காடிகளை செப்.23-இல் அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உலகம் முழுவதும் உள்ள ஆன்லைன் அங்காடிகள் மூலமாக எங்கள் நிறுவனத்தின் குழு உறுப்பினா்கள் மிகச் சிறந்த உன்னதமான சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வருகின்றனா். அதேபோன்ற உயா்தர சேவையை இந்திய வாடிக்கையாளா்களும் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. செப்டம்பா் 23-ஆம் தேதி முதல் இந்தியாவில் புதிய ஆன்லைன் ஸ்டோா்களை நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது. இந்த அங்காடிகளில், முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படும். இது, வாடிக்கையாளா்களின் பண்டிகை கால தேவையை நிறைவு செய்வதுடன், நிறுவனத்தின் விற்பனையும் கணிசமான அளவில் அதிகரிக்க உதவும் என ஆப்பிள் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT