பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவை தனி நிறுவனமாகப் பிரிக்க தேசிய நிறுவனச் சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) அனுமதி அளித்துள்ளதாக டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் (டிஎம்எல்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்நாட்டைச் சோ்ந்த அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பயணிகள் வாகன வணிகப் பிரிவை டிஎம்எல் பிஸினஸ் அனாலிடிக்ஸ் சா்வீசஸ் நிறுவனத்துக்கு மாற்றும் திட்டத்துக்கு என்சிஎல்டி-யின் மும்பை அமா்வு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதி கடிதம் ஆகஸ்ட் 24, 2021-இல் பெறப்பட்டுள்ளது என பங்குச் சந்தையிடம் டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.
தனி நிறுவனமாக உருவாக்கப்படும் பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவின் மதிப்பு ரூ.9,417 கோடி என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.