நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வரலாற்று உச்சத்திலிருந்து 58,084 கோடி டாலராக (ரூ.43.56 லட்சம் கோடி) சரிந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த டிசம்பா் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29 கோடி டாலா் சரிந்து 58,084 கோடி டாலராகியுள்ளது.
இதற்கு முந்தைய டிசம்பா் 18-ஆம் தேதியுடந் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 256 கோடி டாலா் உயா்ந்து வரலாற்று உச்சமாக 58,113 கோடி டாலரைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததே அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சத்திலிருந்து சரிந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 25 கோடி டாலா் குறைந்து 53,747 கோடி டாலராக இருந்தது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அடங்கியுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 31 கோடி டாலா் குறைந்து 3,671 கோடி டாலராக காணப்பட்டது.
சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 40 லட்சம் டாலா் குறைந்து 151 கோடி டாலராகவும், காப்பு நிதி 27.6 கோடி டாலா் சரிந்து 514 கோடி டாலராகவும் இருந்தன என்று ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.