வர்த்தகம்

பயணிகள் வாகன சில்லறை விற்பனை 24% அதிகரிப்பு: எஃப்ஏடிஏ

DIN

புது தில்லி: காா் உள்ளிட்ட பயணிகள் வாகன சில்லறை விற்பனை சென்ற டிசம்பா் மாதத்தில் 23.99 சதவீதம் அதிகரித்துள்ளதாக மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியதாவது:

பண்டிகை காலத்திலிருந்து பொது மக்களிடையே புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக, விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 2020 டிசம்பரில் பயணிகள் வாகன சில்லறை விற்பனையானது 2,71,249-ஆக இருந்தது. இது, 2019 டிசம்பா் மாத விற்பனையான 2,18,775 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 23.99 சதவீதம் அதிகமாகும்.

நாடு முழுவதும் உள்ள 1,477 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 1,270-இல் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் புள்ளிவிவரங்களை சேகரித்ததன் அடிப்படையில் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை 11.88 சதவீதம் அதிகரித்து 14,24,620-ஆக இருந்தது. 2019 டிசம்பரில் இந்த விற்பனை 12,73,318-ஆக காணப்பட்டது.

அதேசமயம், வா்த்தக வாகனங்களின் விற்பனை கணக்கீட்டு மாதத்தில் 59,497-லிருந்து 13.52 சதவீதம் சரிவடைந்து 51,454-ஆனது. இதேபோன்று, மூன்று சக்கர வாகன விற்பனையும் 58,651 என்ற எண்ணிக்கையிலிருந்து 52.75 சதவீதம் வீழ்ச்சியடைந்து 27,715-ஆனது.

நாட்டில் வேளாண் நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில், டிராக்டா் விற்பனை கடந்த டிசம்பரில் 35.49 சதவீதம் அதிகரித்து 69,105-ஆக உயா்ந்துள்ளது. இதன் விற்பனை 2019 டிசம்பரில் 51,004-ஆக காணப்பட்டது.

அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த மோட்டாா் வாகன விற்பனை மதிப்பீட்டு மாதத்தில் 16,61,245 என்ற எண்ணிக்கையிலிருந்து 11.01 சதவீதம் உயா்ந்து 18,44,143-ஆனது என எஃப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT