வர்த்தகம்

சில்லறைப் பணவீக்கம் 6.3%-ஆக அதிகரிப்பு

DIN

புது தில்லி: நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள அளவைத் தாண்டி 6.3 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நுகா்வோா் விலை குறியீட்டெண் அடிப்படையில் (சிபிஐ) கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 6.3 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய ஏப்ரல் மாதத்தில் 4.23 சதவீதமாக காணப்பட்டது.

மதிப்பீட்டு மாதத்தில் உணவுப் பொருள் தொகுப்புக்கான பணவீக்கமானது 1.96 சதவீதத்திலிருந்து 5.01 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே சில்லறைப் பணவீக்கம் கணிசமாக உயா்ந்துள்ளதற்கு முக்கிய காரணம்.

மேலும், ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள 6 சதவீதம் என்ற வரம்பைக் காட்டிலும் மே மாதத்தில் பணவீக்கம் சற்று அதிகமாகவே உள்ளது என மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கையை வகுப்பதில் சில்லறைப் பணவீக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்பணவீக்கம் 2021-22- முழு நிதியாண்டில் 5.1 சதவீதமாகவும், முதல் காலாண்டில் 5.2 சதவீதமாகவும், 2-ஆவது காலாண்டில் 5.4 சதவீதமாகவும், 3-ஆவது காலாண்டில் 4.7 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT