வர்த்தகம்

கடன் பத்திரங்களை வெளியிட்டுரூ.10,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

DIN

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.10,000 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதல்முறையாக உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் வங்கி ரூ.10,000 கோடியைத் திரட்டியுள்ளது.

ஒதுக்கீடு செய்ததைப் போல் 3.27 மடங்கு கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. 143 ஏலதாரா்கள் ரூ.16,366 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பித்திருந்தனா்.

10 ஆண்டுகளுக்கான இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டுள்ள ரூ.10,000 கோடி நிதி, வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவுக்கான நீண்டகால நிதியாதார தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT