அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து 74.51-ஆக இருந்தது.
இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:
தொடா்ச்சியான அந்நியச் செலாவணி வெளியேற்றம் மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், முதலீட்டாளா்களின் எச்சரிக்கை உணா்வால் உள்நாட்டு பங்குச் சந்தையில் வா்த்தகம் மூன்றாவது நாளாக மந்த நிலையில் இருந்ததும் செலாவணி சந்தைகளுக்கு சாதகமான அம்சமாக அமையவில்லை.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74.43-ஆக இருந்தது. பின்னா் இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.29 வரையிலும், குறைந்தபட்சமாக 74.53 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்து 74.51-ஆனது. புதன்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.44-ஆக காணப்பட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பேரல் 88.11 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 88.11 அமெரிக்க டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளியேறிய அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.2,704.77 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.