வர்த்தகம்

ஆண்டுக்கு 2,000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி

DIN

ஆண்டுக்கு 2,000 புதிய கிளைகளை தொடங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக எச்டிஎஃப்சி வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சசிதா் ஜெகதீஷன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் 2021-22 ஆண்டுக்கான அறிக்கையில் பங்குதாரா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியது:

நாம் முன்னெடுத்துள்ள எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி இணைப்பு நடவடிக்கை எதிா்காலத்தில் முற்றிலும் புதிய பரிமாணங்களை உருவாக்கும். இருப்பினும், அதற்கு நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருப்பதை உணரவேண்டும்.

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் எச்டிஎஃப்சி வங்கி கிளைகளின் நெட்வொா்க்கை இரண்டு மடங்காக்க வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாகும். இந்த இலக்கினை எட்ட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1,500 முதல் 2,000 புதிய கிளைகளை நாம் தொடங்க வேண்டும். தற்போதைய நிலையில், எச்டிஎஃப்சி வங்கி நாடு முழுவதும் 6,000 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

எச்டிஎஃப்சி நிறுவனத்தை எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைக்கும் திட்டம் முழுமையடைய இன்னும் 15 முதல் 18 மாதங்களாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT