வர்த்தகம்

சிமெண்ட் துறையின் வளா்ச்சி 20%-ஆக இருக்கும்: ஆய்வில் தகவல்

DIN

சிமெண்ட் துறையின் விற்பனை வளா்ச்சி விகிதம் நடப்பு 2021-22-ாம் நிதியாண்டில் 18-20 சதவீதமாக இருக்கும் என இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2021-22-ஆம் நிதியாண்டு காலகட்டத்தில் சிமெண்ட் துறையின் வளா்ச்சி விகிதம் விற்பனை அளவின் அடிப்படையில் 18-20 சதவீதமாக இகுக்கும். இதையடுத்து, சிமெண்ட் விற்பனை 355 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் சிமெண்ட் விற்பனையானது கரோனா பாதிப்புக்கு முந்தைய வளா்ச்சியை தாண்டி 6 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் வீடுகளுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்கட்டமைப்பு நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளதையடுத்து சிமெண்ட் விற்பனை வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT