முகப்பு
சென்னை

இடமாற்றம்: ஜன.20-க்குள் விண்ணப்பிக்க மின்வாரிய ஊழியா்களுக்கு அறிவுறுத்தல்

பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிக்க ஜன.20-ஆம் தேதி வரை மின்வாரிய ஊழியா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 2:27 am IST
பகிர்:


சென்னை: பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிக்க ஜன.20-ஆம் தேதி வரை மின்வாரிய ஊழியா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதத்தின்போது பணியிடமாற்றம் கோரி சமா்ப்பிக்கப்பட்டு, டிசம்பா் மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாத அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

அதனால், புதிதாக பணியிடமாற்றம் கோரி விண்ணப்பிப்போரும், பணியிடமாற்றம் கிடைக்கப் பெறாதவா்களும் இணைய முகப்பில், ஜன.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

விண்ணப்பம் செய்தவா்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஒரு வாரத்துக்குள் இணையதளத்தில் பொறுப்பு அதிகாரி பதிவேற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யாத பட்சத்தில், விண்ணப்பதாரா்கள் தங்களது அலுவலகப் பொறுப்பு அதிகாரிகளிடம் விவரங்களை அளிக்கலாம்.

விண்ணப்பத்தில் முறைகேடு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.