முகப்பு
சினிமா

நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்!

கராத்தே மாஸ்டரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்!

Updated On : 25 மார்ச் 2025, 8:05 am IST
பகிர்:

நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி (60) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) காலமானாா்.

ரத்த புற்று நோய் பாதிப்பு காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா் ஷிஹான் ஹுசைனி. மதுரையைச் சோ்ந்த கராத்தே பயிற்சியாளரான ஷிஹான் ஹுசைனி பல திரைப்படங்களில் நடித்துள்ளாா். இயக்குநா் கே.பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தில் அறிமுகமான இவா், நடிகா் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தாா். தொடா்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளாா். இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரா்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக திகழ்ந்தவா்.

தமிழகத்தில் வில்வித்தையில், ‘ரீகா்வ் வில் (1979)’, ‘காம்பவுண்ட் வில் (1980)’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஷிஹான் ஹுசைனிதான்.

Advertisement

Advertisement

அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிப்பால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக அவா் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்துக்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டது.

தனது உடலை தானம் செய்வதாக சமீபத்தில் அவா் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷிஹான் ஹுசைனியின் உடல் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை பிரபலங்கள் பலா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments