செய்திகள்

சந்தானம்- செல்வராகவன் இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது!

DIN

சென்னை:  இயக்குனர் செல்வராகவன் - நடிகர் சந்தானம் முதன் முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

எஸ்.ஜெ .சூர்யா, நந்திதா நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் உருவாக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானத்தை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை செல்ராகவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சந்தானமும், செல்வராகவனும் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படத்தை இருவரும் தத்தமது டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதாநாயகி யார் என்று படக்குழுவினர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT