செய்திகள்

கோலி - அனுஷ்கா திருமண ரகசியத்தை வெளியே கசிய விடாமல் பாதுகாத்த புகைப்படக் கலைஞர்கள்!

கடந்த ஒரு மாதமாக ஜோஸப், நோயல், ஷிவாலி ஆகியோர் (புகைப்படக் கலைஞர்கள்) வாயைத் திறக்காமல் இருந்தார்கள்...

எழில்

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

நீங்கள் சமூவலைத்தளங்களிலும் செய்தித்தாள்களிலும் பார்த்த திருமணப் புகைப்படங்களை எடுத்த நிறுவனம் - ஸ்டோரீஸ் பை ஜோசப் ரதிக்! சமீபத்தில் நடைபெற்ற சமந்தாவின் திருமணப் புகைப்படங்களையும் எடுத்தது இந்நிறுவனம்தான். சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்நிறுவனம், கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

அனுஷ்கா, கோலிக்கு வாழ்த்துகள். உங்கள் திருமணத்தின் விருந்தினராகவும் அதைப் புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பு கிடைத்தது எங்கள் பாக்கியம். இத்திருமணத்தை விடவும் இதற்கு அடுத்ததாக உள்ள அருமையான வாழ்க்கைக்கு எங்கள் ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பாக வாழ்த்துகள். 

கடந்த ஒரு மாதமாக ஜோஸப், நோயல், ஷிவாலி ஆகியோர் (புகைப்படக் கலைஞர்கள்) வாயைத் திறக்காமல் இருந்தார்கள். இப்போது இதைப் பற்றி நாங்கள் பேசலாம்! நன்றி கடவுளே. என்ன ஓர் அருமையான வருடம் என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT